மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டாமல் சீல் வைப்பதா? - சீமான் கண்டனம்.

மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டாமல் சீல் வைப்பதா? - சீமான் கண்டனம்.

குளித்தலை அருகே கோவில் திருவிழாவில் பட்டியல் இன சமூக இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தற்காலிகமாக கோவிலை அதிகாரிகள் இழுத்துப் பூட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும் உள்ளூரான வீரணம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த திருவிழாவில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்து வெளியே தள்ளியதாக தெரிகிறது. சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்ட போதும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் காரணமாக காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் இரு தரப்பினருடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர் என அடுத்து கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலை பூட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் கோவிலை பூட்டக்கூடாது எனவும், கோவிலுக்குள் எங்களை அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை அடுத்து இரு தரப்பினரிடமும் பேசிய அதிகாரிகள் இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அதுவரை கோவிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும் கூறி கோவில் திருவிழாவை நிறுத்தி கோவிலுக்கு பூட்டு போட்டனர்  இந்த சம்பவம் காரணமாக காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டாமல் சீல் வைப்பதா என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே அட்டவணை பிரிவு மக்கள் வழிபாடு செய்ய அனுமதி, மறுக்கப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு முத்திரையிட்டு அரசு அதிகாரிகள் மூடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.  

அதோடு, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகராத்தில் அரசு தலையிட்டு கோயிலை திறந்து, அட்டவணை பிரிவு மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இதையும் படிக்க     |  கோவை: மாணவர்களுக்கு சிக்கல்...பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பெற்றோர்கள் கோரிக்கை!