சீனியருக்கு மரியாதை ரொம்ப முக்கியம் சாரே! ஈவ் டிசிங் பிரச்சனையில் மாணவர்களிடையே கடும் மோதல் !!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மன்னை அரசு கல்லூரியில் ஈவ் டீசிங் பிரச்சனையால் மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சீனியருக்கு மரியாதை ரொம்ப முக்கியம் சாரே! ஈவ் டிசிங் பிரச்சனையில் மாணவர்களிடையே கடும் மோதல் !!
Published on
Updated on
1 min read

மன்னை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் அபினேஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு  உரிய மரியாதை கொடுக்காததால், முதலாமாண்டு மாணவன் அபினேஷை கண்டித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த அபினேஷை 2-ம் ஆண்டு மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதற்கு காரணம் ஈவ்டீசிங் குறித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் தற்போது மாணவர்கள் தாக்கிக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com