முதல்வரான பின் முதல்முறையாக சொந்தஊர் செல்லும் ஸ்டாலின்.! 

முதல்வரான பின் முதல்முறையாக சொந்தஊர் செல்லும் ஸ்டாலின்.! 
Published on
Updated on
1 min read

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்  முதல்முறையாக இன்று தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்கமாக திருவாரூர் செல்கிறார்.திருவாரூர் அடுத்த காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அதே பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞர் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

அதன் பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதனைத் தொடர்ந்து நாளைய தினம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவ பிரிவு வளாகத்தை திறந்து வைக்கிறாத். பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் நாளை பிற்பகலுக்கு மேல் சென்னை புறப்படுகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com