பெத்தேல் நகர் வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

பெத்தேல் நகர் வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெத்தேல் நகர் குடியிருப்பு வாசிகள்:

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெத்தேல் நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  

உயர்நீதிமன்றம் ஒருதலையான உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு:

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், பாதிக்கப்பட்டோர் தரப்பு வாதங்களையும், நியாயத்தையும்  கேட்காமல் உயர்நீதிமன்றம் ஒருதலையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பெத்தேல் நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசின் அனுமதியுடன் மின் இணைப்பு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கி வந்ததாகவும் தெரிவித்தார். தற்போது குடியிருப்புகளை அகற்றக் கூறுவது நியாயமில்லை என்பதால்,  உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரினார். 

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்:

மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.