தமிழக டிஜிபி திரிபாதி, வரும் 30 ஆம் தேதி பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். இதனால் புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. டெல்லி யூபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.