டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்; ஆவணத்தை திருப்பிய அனுப்பிய ஆளுநா்...!

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்; ஆவணத்தை திருப்பிய அனுப்பிய ஆளுநா்...!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான ஆவணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை அனுப்பியது. இந்த கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு  ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு!

மேலும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் அளிக்குமாறு, நியமனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே, ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கானது நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகள் ஒவ்வொன்றையும் ஆளுநர் திருப்பி அனுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.