கையும் களவுமாக பிடிப்பட்ட பீடி கடத்தல்காரர்கள்! அதிகாரிகளின் அதிரடி!

இலங்கைக்கு கடத்த இருந்த  2,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்து கடலோர குழும காவல் படையினர் அதிரடி நடவடிக்கை டுத்துள்ளனர்.

கையும் களவுமாக பிடிப்பட்ட பீடி கடத்தல்காரர்கள்! அதிகாரிகளின் அதிரடி!

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சுமார் 28-பண்டல்களில் 2,500-கிலோ எடை  கொண்ட பீடி இலைகள் கடலோர குழும காவல் படையினர் பறிமுதல் செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி வெள்ளைப்பட்டி கடற்கரை பகுதியில் கடலோர குழும காவல் படையினர் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், முதல் நிலைக் காவலர்கள் பகவதி பாபு, ஊர்க்காவல் படை காவலர்கள் கிறிஸ்துராஜா, நிக்க்ஷன் ஆகியயோர் வெள்ளைப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடுகடலில், இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில்  இருந்த  படகை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால், போலீசாரை கண்டதும் படகில் இருந்த நபர்கள் தப்பிப்பதற்காக வெள்ளை நிற மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தலைமறைவாகி தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக கடலில் மிதந்த வெள்ளை நிறமூட்டைகளை கைப்பற்றி சோதனை மேற்க்கொண்டதில் 28-பண்டல்களில் 2,500-கிலோ எடை  கொண்ட பீடி இலைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டனர். தொடர்ந்து, மூட்டைகளை பறிமுதல் செய்த கடலோர குழுமம், அவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்பு இந்த கடத்தல் சம்பவம் குறித்து கடலோர காவல் துறை ஆய்வளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.