ஆளுநர் தமிழ்நாடு சர்ச்சை - ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை

ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரியாக இருக்கும் என கூறியது பெரும் சர்ச்சை உருவாக்கியது

ஆளுநர் தமிழ்நாடு சர்ச்சை - ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை

பெரும் சர்ச்சை உருவானபிறகு ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது 

 ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி -தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

மேலும் படிக்க|மீண்டும் டெல்லி பறந்த ஆளுநர்...தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் | Tamil news  Governor RN Ravi explains about the Tamil Nadu dispute

அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை கொள்வதோ மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும், தனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.