74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.

மூவர்ணக் கொடியை ஏற்றிய ஆளுநர் :

நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க : பாடகி வாணி ஜெயராம் உள்பட...106 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு... !

இந்நிலையில் காவல்துறை வாகன அணிவகுப்புடன் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதிக்கு இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் சென்றனர். பின்னர் சரியாக காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, உழைப்பாளர் சிலை அருகே மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 

இதைத்தொடர்ந்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியக்குழு உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதை ஆளுநர் ஏற்று கொண்டார்.