கடலில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வது சாத்தியமா? தொடர்பான ஆய்வுக்காக ஸ்காட்லாந்து, லண்டன் செல்லும் தமிழகக் குழு!

கடலில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வது சாத்தியமா? தொடர்பான ஆய்வுக்காக ஸ்காட்லாந்து, லண்டன் செல்லும் தமிழகக் குழு!
Published on
Updated on
1 min read

கடலில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வது சாத்தியமா என்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் 5 பேர் கொண்ட குழு, ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று செல்ல உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வட சென்னை அனல் மின் நிலைய 3ம் நிலைப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என குறிப்பிட்டார். மின்துறையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com