தூத்துக்குடி கருவாடு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

தூத்துக்குடி கருவாடு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கருவாடு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்  சேதமடைந்துள்ளன.

சிவந்திப்பட்டி - தீத்தாம்பட்டி சாலையில் அந்தோணி அரசாங்க மணி என்பவருக்குச் சொந்தமான கருவாடு ஆலை மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், 4 தீயணைப்பு வாகனங்களில் சென்று பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் குடோனில் இருந்த கருவாடு மூட்டைகள், மினிலாரி, இயந்திரங்கள் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், சேதத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.