அக்டோபர் 9ல் கூடுகிறது சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர், சட்டப்பேரவை வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாகவும், 2023 - 24 ஆண்டிற்கான கூடுதல் செலவீன தொடர்பான மானிய கோரிக்கையை தமிழக நிதி அமைச்சர் அன்றைய தினம் அறிமுகம் செய்வார் என கூறினார்.

மேலும், ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பந்நோக்கு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அங்குள்ள அறைகள் மற்றும் அறைகலன்கள் பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையாக இயங்கி வருகவதாகவும், கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலத்தின் தற்போதைய நிலைக்கு நாங்கள் காரணம் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல், புதிய தலைமை செயலகம் கட்டுவது  தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும்,
சட்டப்பேரவை நடவடிக்கைகள் வழக்கம் போல் நேரலை செய்யப்படும் எனவும் கூறினார். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதிமுக சார்பில் மீண்டும் அது குறித்து மனு அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!