தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு...வானிலை மையம் தகவல்!

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு...வானிலை மையம் தகவல்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : காலநிலை மாற்றத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு சாதனை...!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.