தற்காலிகமாக முடிவுக்கு வரும் உப்பு உற்பத்தி...ஏன் தெரியுமா?

தற்காலிகமாக முடிவுக்கு வரும் உப்பு உற்பத்தி...ஏன் தெரியுமா?

வடகிழக்கு பருவ மழைக்காலம் நெருங்கி வருவதால் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது. 

பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி:

வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறதுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை கிட்டதட்ட 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும். அதில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பாண்டு உற்பத்தி தொடங்கியது முதல் கடந்த மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கப்பட்ட உப்பு உற்பத்தி:

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு பின்பு உப்பளங்களில்  பாத்திகள்  சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழுவீச்சில் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கபட்டது.

இதையும் படிக்க: இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

நல்ல விலை போகும் :

இந்நிலையில், மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் மீண்டும் உப்பு உற்பத்தியை துவங்க சத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.