கூவம் ஆற்றில் மிதந்து சென்ற முதியவர் சடலம்...

சென்னை வியாசர்பாடி கூவம் ஆற்றில் மிதந்து சென்ற ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்
கூவம் ஆற்றில் மிதந்து சென்ற முதியவர் சடலம்...
Published on
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஆற்றில் மிதந்து சென்ற சடலத்தை, சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் கருப்பையா என்றும், அவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com