90% பணிகள் நிறைவு...கருணாநிதி பிறந்தநாளுக்கு முன்பே பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் தகவல்!

90% பணிகள் நிறைவு...கருணாநிதி பிறந்தநாளுக்கு முன்பே பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் தகவல்!

கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர்கள் தா.மு.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டடத்தின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்கள், விரைவில் கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினர். 

இதையும் படிக்க : எந்த சட்டத்தை வைத்து அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர்...? சபாநாயகர் கேள்வி!

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முன்னரே பேருந்து நிலையம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.