ஆசிரியர் தேர்வு விண்ணப்பங்கள் திருத்தும் அவகாசம் இன்றுடன் முடிவு!!

ஆசிரியர் தேர்வு விண்ணப்பங்கள் திருத்தும் அவகாசம் இன்றுடன் முடிவு!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விவரங்களை ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. 

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2ம் தாளுக்கான தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் இன்றுடன் முடிவு:

இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம் ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து அதில் தவறுகளை சரிசெய்து ஆன்லைனில் திருத்தும் வசதி 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.