சசிகலாவை அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர்,.. கொதித்தெழுந்த அமமுகவினர்.!  

சசிகலாவை அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர்,.. கொதித்தெழுந்த அமமுகவினர்.!  
Published on
Updated on
1 min read

நத்தத்தில் சசிகலாவை அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்தனர். 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் நத்தம் தொகுதி எம்எல்ஏவான நத்தம் விஸ்வநாதன்  சனிக்கிழமை  திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கும் அண்ணா திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை அவரை தொலைபேசியில் அல்லது வேறு எந்த ஒரு விதத்தில் தொடர்பு கொண்டால் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் "சசிகலா தாய் இல்லை அவர் ஒரு பேய் அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ் லக்கேஜ் சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை" என்று அவரை ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது. 

இதையடுத்து இன்று நத்தம் பேருந்து நிலையம் அருகே  அம்மா மக்கள் முன்னேற்ற கழக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராஜா,நகர செயலாளர் சிவக்குமார், தலைமையில் நத்தம் விசுவநாதனை  கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நத்தம் காவல்துறையினர் அமமுகவினர் எரித்த உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com