தெரு நாய்களின் அட்டகாசம்...! பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்...!

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு வார்டுகளில் உள்ள தெரு நாய்கள் பிடிக்க பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்...!

தெரு நாய்களின் அட்டகாசம்...! பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்...!

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பெரும்பாலான பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 23 வது வார்டு மலையப்பன் சாலை பகுதியில் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ரித்தீஷ் என்பவரை தெரு நாய்கள் கடித்துள்ளது.  இது பற்றி தகவல் அறிந்து வந்த, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சரோஜா தலைமையில் பொதுமக்கள் ஏராளமானோர்  திரண்டு வந்து தீயணைப்பு நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நாய்களிலிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் எனவும், நாய்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.