கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் நீட்டிப்பு இல்லை?

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் நீட்டிப்பு இல்லை?

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் நீட்டிப்பு இல்லை என தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இத்திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் பணி நடைபெற்றது.

இதையும் படிக்க : நீட் தேர்வுக்கு ஒருபுறம் கடும் எதிர்ப்பு; மறுபுறம் குவியும் விண்ணப்பங்கள்...பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புள்ளி விவரம்!

இதற்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக  மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய தவறியவர்களுக்காக  விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதுவரை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் நீட்டிப்பு இல்லை என தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.