தூத்துக்குடி: 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் துவங்கின!!

தூத்துக்குடி: 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் துவங்கின!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று தொடங்கியது.

காலையில் நடைபெற்ற 3 போட்டிகளில்  பீகார், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் வெற்றி பெற்றன.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. வரும் 29ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் பங்கேற்றுள்ளன.

8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் போட்டியில் பீகார் அணியை எதிர்த்து அசாம் மோதியது. போட்டியின் முடிவில் 11 - 1 என்ற கோல் கணக்கில் பீகார் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. இதேபோல், அடுத்த போட்டிகளில் கோல்மழை பொழிந்த அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள், எதிரணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றன.