முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு...!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை ஒட்டி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா, இன்று ஆன்மீக விழாவாகவும், 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்க : நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இராணுவ வீரர்... !

இதனை அடுத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.