கட்டிக்கிட்ட மனைவிங்க சில ஆண்டுகளிலே அடுத்தடுத்து தற்கொலை.. கணவர் சைக்கோவா?? திருப்பத்தூரில் பரபரப்பு!!

திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிக்கிட்ட மனைவிங்க சில ஆண்டுகளிலே அடுத்தடுத்து தற்கொலை.. கணவர் சைக்கோவா??  திருப்பத்தூரில் பரபரப்பு!!

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பெரிய நகர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் நியாய விலை கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனையடுத்து ஜெயசீலன் இரண்டாவது முறையாக சுகன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடிபோதைக்கு ஆளான ஜெயசீலன் சுகன்யாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயசீலன் இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட இரண்டு மனைவிகளும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.