திருவிடைமருதூர் : வீரமாகாளியம்மன் கோவில் ஆடி பெருவிழா...!

திருவிடைமருதூர் அருகே முட்டகுடி வீரமாகாளியம்மன் ஆடி பெருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவிடைமருதூர் : வீரமாகாளியம்மன் கோவில் ஆடி பெருவிழா...!

திருவிடைமருதூர் அருகே முட்டகுடி வீரமாகாளியம்மன் ஆடி பெருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா முட்டை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும், ஆடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பால்குடம் எடுத்து கிராம வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயம் நோக்கி வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் வீரமாகாளியம்மனுக்கு, பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு வீரமாகாளியம்மனை வழிபட்டனர்.