வார இறுதி நாளான இன்று உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

வார இறுதி நாளான இன்று உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
Published on
Updated on
1 min read

சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் வார இறுதி நாளான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இங்கு இதமான காலநிலை நிலவுவதாலும், இப்பூங்காவில் உள்ள அரிய வகை மரங்களையும், இயற்கையையும் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com