பைக் மீது மோதிய லாரி - பள்ளி மாணவி பலியான சிசிடிவி காட்சி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பைக் மீது மோதிய லாரி - பள்ளி மாணவி பலியான சிசிடிவி காட்சி
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெய்வேலி தெற்கு வௌ்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது 16 வயது மகள் பார்கவியுடன், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே கடலூரிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. இதில் வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் வேல்முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் பார்கவி மற்றும் வேல்முருகன் ஆகியோர் வாகனத்துடன் சிக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் இருவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பார்கவி வழியில் உயிரிழந்தார்.

வேல் முருகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com