தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை தாக்கல்... தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில், அப்போதைய ஆட்சியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் இழப்பீடு வழங்கவும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை தாக்கல்... தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை...

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையானது. அப்போது கலவரத்தை அடக்க காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 13 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியர் அலட்சியம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அறிக்கை:

இதையடுத்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை, சட்டசபையில் இன்று ஈ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்றி தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | இது மிகப்பெரிய அநீதி செயல்!!!- போராளி பாத்திமா பானு!!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தகவல்கள்  கசிந்தது எப்படி? |Thoothukudi firing - How did Justice Aruna Jagatheeshan  commission report ...

அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் முறையாக எச்சரிக்கப்படவில்லை என்றும் அவர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System, அதாவது நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் பயன்படுத்தப்படவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினர்...அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய சபாநாயகர்...!

மேலும், அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ஏற்கனவே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்து தாய்மார்களுக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | களேபரம் ஆன கூட்டத்தொடர்...சபாநாயகர் சொன்ன 89 ஆம் ஆண்டு என்ன நடந்தது...?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 3 ஆயிரம் பக்க விசாரணை அறிக்கை -  முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார் | 3 thousand page ...