நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெரியகுளத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் அச்சமின்றியும் வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக பெரியகுளத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெரியகுளத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களின் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் தமிழ்நாடு பெரியகுளம் தென்கரை காவல்துறை சார்பாக விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி நடைபெற்றது...

இந்தப் பேரணியை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டேங்ரே பிரவீன் உமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது பெரியகுளம் தென்கரை தேவர் சிலை பகுதியில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.