உ.பி-யில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - கேசவ் பிரசாத் மவுரியா அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
உ.பி-யில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - கேசவ் பிரசாத் மவுரியா அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இரண்டு தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்சியினரிடையே பேசிய உள்தறை அமைச்சர் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதன் அவசியம் குறித்து பேசியிருந்தார். அதற்கு அடுத்த உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய கேசவ் பிரசாத் மவுரியா, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி என்றும் மவுரியா கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com