இது ஒரு மாநில நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியாகவே அமையும் என்றும், மாநில உயர்நீதிமன்றத்தில் மொழி புரியாத ஒரு வழக்கறிஞரை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது எனவும், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பேசுபவர்களை அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சிப்பதும் ஒரு வகை இந்தித் திணிப்பே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.