"பாஜகவிலிருந்து கவுதமி விலகுவது வருத்தமளிக்கிறது" வானதி சீனிவாசன்!

நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகியது வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

நடிகை கவுதமி, திடீரென பாஜகவின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் பாஜக தலைமைக்கு எழுதியுள்ளர்.

அதில் 25 வருடமாக பாஜகவில் பணியாற்றி வரும்  தனது வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கட்டத்தில் நிற்பதாகவும், ஆனால் கட்சி தலைவர்களிடம் இருந்து தனக்கு எந்த ஆதரவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவரை நம்பி ஒப்படைத்த  சொத்துக்களை, பணத்தை  ஏமாற்றிவிட்டதகாவும் கவுதமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளாதாகவும், தனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கௌதமி பாஜகவில் இருந்ததால், அவரது புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை என்றும், அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நடிகை கௌதமி கட்சிக்காக அதிகம் உழைத்தவர் என்று கூறிய வானதி சீனிவாசன், புகார் குறித்து, கட்சி மேலிடத்திடம் கௌதமி புகார் அளிக்கவில்லை என்றும், கௌதமி விலகுவது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.