சென்னை சென்ட்ரல் - கோவை: வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம்...!

சென்னை சென்ட்ரல் - கோவை: வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம்...!

சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னை - மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!!

அதன்படி, காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில் கோவை வரை இயக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ரயில் சேவையை ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.