செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்.. சென்னை விமான நிலையத்தில் இறையன்பு தலைமையிலான குழு ஆய்வு!!

44ஆவது ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலளர் இறையன்பு தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்.. சென்னை  விமான நிலையத்தில் இறையன்பு தலைமையிலான குழு ஆய்வு!!

சா்வதேச 44வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 28ஆம்  தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ம்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனா்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வீரர்கள் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு செல்கின்றனா்.

அதேபோல் போட்டிகள் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்ல உள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமான நிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து செஸ் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய உள்நாடு, பன்னாட்டு முனையங்களில் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற உரிய வசதிகள் ஏற்படுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  குடியுரிமை, சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளில் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வீரர்கள், பயணிகளுக்கி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினா், செங்கல்பட்டு மாவட்ட போலீசாா் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வருபவா்களுக்கு எந்த விதமான இடையூறுகள், தடங்கள்கள் ஏற்படாமல் அனைத்து வதசிகளையும் உடனுக்குடன் சென்னை விமான நிலையத்தில் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைடையிலான சிறப்புக் குழு ஆய்வு செய்தது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது விமான நிலைய இயக்குனர் சரத்குமார் மற்றும் செஸ் ஒலிம்பியாட் குழு அதிகாரிகள் உடன் இருந்தனர்.