‘குறவன் குறத்தி‘ நடனத்தைத் போல (பறை) அடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் என திமுகவிற்கு வேண்டுகோள் விடுத்த விசிக!!!
தமிழ்நாட்டில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் குறவன், குறத்தி வேடமிடும் கலைஞர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இது குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இருப்பதாக தமிழக குறவர், மலைக் குறவர் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடியின சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழக அரசும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், , “தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.
மேலும் படிக்க| மக்களவை கூடிய 5வது நிமிடத்திலேயே ஒத்திவைப்பு
எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
‘குறவன் குறத்தி‘ நடனத்தைத் போல (பறை) அடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடைவிதித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசை வலியுறுத்தி விசிக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Dr. ரவிக்குமார் எம்.பி அவருடைய ட்வீட்டர் பக்கத்தில், கலை என்ற பெயரில் குறிப்பிட்ட சமூக பிரிவினரை இழிவுபடுத்தும் குறவன் குறத்தி நடனத்தை தமிழ்நாடு தடை செய்ததுபோல பறை அடிப்பதையும் தடை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.
விசிக பறைக்கு முன்பாக தண்டோராவிற்கு தடை வாங்கியது
இதற்கு முன்பாக தண்டோரா போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தியது இதனை ஏற்று தண்டோரா போடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத்தேவையில்லை . ஒலிபெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும் எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.