உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் கூறியதென்ன?!!

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் கூறியதென்ன?!!

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, இதுகுறித்து நல்ல அறிக்கை விரைவில் வெளிவரும்.

தொண்டர்கள் யார் பக்கம்?:

ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பக்கம் என ஈபிஎஸ் சொல்கிறாரே என்ற செய்தியாளர் கேள்விக்கு ஓபிஎஸ், ”தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என பெரியகுளம் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம் என்பது தெளிவாகிறது எனக் கூறியிருந்தார். 

நல்ல அறிக்கை:

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, “இதுகுறித்து  நல்லதொரு அறிக்கை விரைவில் வெளிவரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதகமான தீர்ப்பு என்பதால் ஈபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதையும் படிக்க:   அம்மா பிறந்தநாள்.... அதிமுக இரு அணிகள்... தனித்தனி கொண்டாட்டம்!!!