அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? :  விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுரை!!

தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? :  விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுரை!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, காவலர்களுக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம், மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும், அதனை முதலமைச்சர் நேரில் கண்காணித்து  ஆய்வு மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில், முதலமைச்சர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், அதில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், தொடங்கப்பட்டுள்ள திட்டப்  பணிகள், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.