ஆவின் பச்சை பால் தட்டுபாடு ஆரஞ்ச் விலை எப்போ குறையும் ?

ஆவின் பச்சை பால் தட்டுபாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஆரஞ்சு பால் விலை குறைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஆவின் பச்சை பால் தட்டுபாடு ஆரஞ்ச் விலை எப்போ குறையும் ?

ஆவின் பச்சை பால் தட்டுபாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஆரஞ்சு பால் விலை குறைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
 அன்புமணி ராமதாஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஆவின் பச்சை பால் மக்களால் அதிகமாக வாங்கப்படுகிறது அதே நிலையில்  ஆவின் பச்சை பாலுக்கு  தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் பச்சை பால் அதிமாக உற்பத்தி செய்ய வேண்டும் இல்லை என்றால் ஆவின் ஆரஞ்சு பால் விலை குறைக்க வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தினை டேக் செய்துள்ளார்.

 அன்புமணி ராமதாஸ் ட்விட்டர்:  
ட்விட்டரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்
வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என் அன்புமணி ராமதாஸ்  கூறியுள்ளார்.