இன்று கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை துவக்கி வைத்ததாகவும், மருத்துவத்து துறையில் முன்கள பணியாளர்களுக்கும் இன்று மஞ்சக்காமாலை தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை நேற்று தொற்று எண்ணிக்கை 103 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும், சென்னை, கன்னியாகுமரி கோவை, ஈரோடு போன்ற மாவட்டத்தில் உயர்ந்துள்ளதால் இதற்கான கரணங்கள் கண்டறிய வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கேரளாவில் பெரியளவு தொற்று அதிகரித்தற்கு வீடுகளில் தங்கி சிகிச்சை பெருவது தான் காரணம் என்றவர் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.