13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!!

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!!

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கீழச்செவல்பட்டி அடுத்த ஆவனிப்பட்டியைச் சேர்ந்தவர் உதயவள்ளி. இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக  சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து உதயவள்ளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த  சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால்,  உதயவள்ளிக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.