மகளிர் உரிமை தொகை:  சிறப்பு முகாம்கள்  இன்றுடன் நிறைவு!!

மகளிர் உரிமை தொகை:  சிறப்பு முகாம்கள்  இன்றுடன் நிறைவு!!

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

கலைஞரின் மகளிர் உரிமை தொகை  திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இது தொடர்பான விண்ணப்ப பதிவிற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில், 9.25 லட்சம் குடும்ப தலைவிகள்  விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வந்த சிறப்பு முகாமானது இன்று மாலையுடன் நிறைவு பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க || தடால் புடலாக தொடங்கிய அதிமுக மாநாடு...ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்கப்பட்ட இபிஎஸ்!!