வானா?..  நீ என்கூட வா.. நான் தரேன் உனக்கு 2000.. கடை உரிமையாளரை பங்கமாய் கலாய்த்த சாட்டையடி பிச்சைகாரர்!!

என் கூட வா 2000 ரூபாய் சம்பாதிக்கலாம் என கடை உரிமையாளரிடம் எகத்தாளமாக பேசிய பிச்சை எடுக்கும் வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானா?..  நீ என்கூட வா.. நான் தரேன் உனக்கு 2000.. கடை உரிமையாளரை பங்கமாய் கலாய்த்த சாட்டையடி பிச்சைகாரர்!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார்.

அப்போது அந்த கடையின் உரிமையாளர் கை கால்கள் நன்றாக தான் இருக்கிறது. வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். அதற்கு அந்த நபர் சம்பளம் எவ்வளவு தருவாய் என கேட்டபொழுது.. ஒரு நாளைக்கு 400 ரூபாய் தருகிறேன் என கூறி உள்ளார்.

அதற்கு அந்த பிச்சை எடுக்கும் நபர் 400 ரூபாய்  ரூபாய்க்கு வேலை செய்யணுமா.. நான் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் இப்படி கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறியுள்ளார்.

இருந்தால் இருக்கு என சொல்லுங்கள்... இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள்...என கூறி வந்த அந்த பிச்சை எடுக்கும் நபரிடம்.. கடை உரிமையாளர் வேலைக்கு ஆள் வேணும் வரதா இருந்தா வா என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பிச்சை எடுக்கும் நபர், வானா..  நீ என்கூட வா.. நான் தாறன் உனக்கு 2000 என கூறிய படி அங்கிருந்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது./