ஏசி வெடித்து விபத்து...! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்...!

சென்னை திருவிக நகரில் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏசி வெடித்து விபத்து...! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்...!
Published on
Updated on
1 min read

சென்னை திருவிக நகரில் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை திரு வி க நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வெற்றி நகர் மணவாளன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம். 28 வயதான இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஷ்யாம் வீட்டில் தனது  அறையில் ஏசி யை ஆன் செய்துள்ளார். அப்போது, ஏசி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். உடனடியாக திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்பியன், மாதவரம் ஆகிய பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்து ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தீ பரவியதால், ஷாம் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தீயை அணைத்த பின்பு தீயணைப்பு வீரர்கள் ஷயாமின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com