தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி ஆற்றில் தண்ணீர் வராது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் வறட்சி ஏற்படும், குடிநீர் பஞ்சம் ஏற்படும், இது ஒரு உயிர் பிரச்சனை. இதைத் தவிர கர்நாடக அரசு மற்றொரு அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்து விட்டது. இதனை எல்லாம் தட்டிக் கேட்காமல் பூசி முழுகுகின்ற ஆட்சியை ஸ்டாலின் செய்து வருகிறார்.