நடிகை மீரா மிதுனை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போகும் போலீசார்!

நடிகை மீரா மிதுன் மீது உள்ள இரண்டாவது வழக்கில் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நடிகை மீரா மிதுனை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போகும் போலீசார்!

நட்சத்திர ஹோட்டல் ஊழியரை மிரட்டிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை கைது செய்த நிலையில் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை எம்கேபி நகர் எழும்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் மீராமிதுன் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் துரிதமாக எடுத்து வருகின்றனர்.

தொழில் அதிபர் ஜோ மைக்கேல் என்பவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மீரா மிதுன் மிரட்டியதாக கடந்த 2019ஆம் ஆண்டு எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் வழக்குப் பதிவு மட்டுமே செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி இந்த வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதே போன்று  2019ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல்நிலையத்தில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசி வருவதாக தொழில் அதிபர் ஜோ மைக்கேல் கொடுத்த புகாரில் எம்கேபி நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கில் கடந்த 26 ம் தேதி மீரா மிதுனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுன் மீது சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்