சென்னை: ஆலந்தூர் மெட்ரோ அருகே ராட்சச வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி!!

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ அருகே ராட்சச வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி!!
Published on
Updated on
1 min read

அந்த வழிகாட்டு இந்நிலையில் நடைபெற்று வருகிறது வேளாண்மை கூட்டுறவு சங்கம் 

சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலை வழிகாட்டிய இருந்த ராட்சச பலகை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு பெரிதாக உதவ கூடியது வழிகாட்டு பலகைகள்.. இந்த பலகைகள் சென்னையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும். அனைவரின் கண்களுக்கு எளிமையாக தெரிவதற்காக இந்த வழிகாட்டு பலகையை பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.. குறைந்தது 40 அடி இருக்கும்.. அந்த வகையில், சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே கிண்டி, கோயம்பேடு, வடபழனி என மூன்று வழியாக செல்லும் வழி இருப்பதால், புதிதாக வருபவர்கள் குழப்பமில்லாமல் செல்வதற்காக ஒரு பெரிய வாழிகாட்டு பலகை அமைக்கப்பட்டிருக்கும்.. 

இந்நிலையில், அந்த வழிகாட்டு பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.. ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் ஒருவர் இந்த விபத்தில் சிக்கி படும் காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், அரசு பேருந்து முன் பக்கம் கடும் சேதமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவத்துறையினர் கிரேன் மூலம் விழுந்த பலகைகள், இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com