குடியரசு தலைவர் விருந்து; டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

குடியரசு தலைவர் விருந்து; டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சற்று முன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை விமான  நிலையம் வந்தடைந்தார்.

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த இரவு விருந்திற்கான அழைப்பிதழில் குடியரசுத் தலைவரின் பெயர் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனை இந்தியா கூட்டணி தலைவர்கள் கடுமயாக விமர்சித்து வந்தனர். இதே நிகழ்வில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான முதலமைச்சர் முகஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com