சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும்…

சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும்…

சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலையம் நாமக்கல் மாவட்டத்தில அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில மத்திய பயனாளிகள் நிதி கொண்டு அமைக்கப்படும்.

தோல் தொழில்சாலைகளில் இருந்து வரும் அபாய கழிவு நீர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 9 லட்சம் டன் உள்ளது. அதை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலர் டையிங் செய்யக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசு விதிமுறைக்கு மீறி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் 3000 தொழில்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் " மக்கள் இயக்கம் " விரைவாக செயல்பட்டு, அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.