அரசின் செயல்பாட்டால் தொற்று விகிதம் 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதாக குறைந்துள்ளது.! -அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.! 

அரசின் செயல்பாட்டால் தொற்று விகிதம் 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதாக குறைந்துள்ளது.! -அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.! 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர்.அரவிந்த் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், தேவைப்படும்  வசதிகள்  குறித்து  மருத்துவமனை முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். 

அதன் பின்பு  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தொற்று விகிதம் 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதாக குறைந்துள்ளதாகவும், அதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும், அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருதாக தெரிவித்த அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் உடனடியாக  ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தெரிவித்தார்.