இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மூவரும், நுழைவு வாயில் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பக்கிரிசாமி அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருவதும், ஆனால், அரசு சார்பில் வழங்கப்படும் கம்பி, சிமெண்ட் உள்ளிட்டவற்றை ஊராட்சி மன்ற தலைவர் தர மறுத்ததும் தெரியவந்தது. உடனடியாக குறைகளை கேட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதா உறுதியளித்தனர்.