மதுரையில் பகீர் சம்பவம்...போலீசார் தீவிர விசாரணை!

மதுரையில் பகீர் சம்பவம்...போலீசார் தீவிர விசாரணை!
Published on
Updated on
1 min read

மதுரை திருமங்கலத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாகிச்சூடு சம்பவம்:

மதுரை திருமங்கலம் அருகே உள்ள காட்டு பத்தரகாளியம்மன் கோயிலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களுக்கான விருந்தோம்பல்  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டு அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

விசாரணை மேற்கொண்ட போலீசார்:

இதனைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

முன்விரோதம் காரணமா?:

அந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தனசேகரன் என்பவரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் முன்விரோதத்தால் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது விசாரணையில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com